வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன.
புதுடில்லி, கர்நாடக சட்டசபை தேர்தலில், வளர்ச்சியை முன்னிறுத்தி, பா.ஜ., பணியாற்றுகிறது. ஆனால், காங்., ஜாதி குழுக்களுக்கு, 'லாலிபாப்' அளித்து, அவர்களை திசை திருப்புகிறது, என, பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். கர்நாடகாவில், அடுத்த மாதம், ௧௨ல் சட்டசபை தேர்தல் நடக்கிறது. மனு தாக்கல் முடிந்துவிட்ட நிலையில், அங்கு பிரசாரம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில், பா.ஜ., சார்பில் .
பா.ம.க நிறுவன ர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:கல்லூரி மாணவிகளுக்கு வலைவீசும்படி நிர்மலாதேவிவை தூண்டியதாக பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகனும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கைதாகியுள்ளனர். இந்தநிலையில் பல்கலைக்கழகப் பணியாளர்கள் எவரும் போராட்டங்களில் பங்கேற்கவும், பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கவும் மதுரைப் பல்கலைக்கழக நிர்வாகம் தடை விதித்திருக்கிறது. தமது பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சும் துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை போராட்டங்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். எனவே, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பெயரையும், புகழையும் மீட்பதற்காக போராடுவோருக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வழக்கின் விசாரணை முடியும் வரை துணைவேந்தர் பதவியிலிருந்து செல்லத்துரையை நீக்கி வைக்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.
ராகுல் காந்தி உத்தரவுப்படி காங்கிரஸ் நடத்தும் 3 கூட்டங்களில் பங்கேற்காமல் புறக்கணித்தால் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் நீக்கப்படுவார்கள் என்று மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். தமிழ்நாடு மீனவர் காங்கிரசின் மாநில செயற்குழு கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. மீனவரணி மாநில தலைவர் கஜநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைப்பதாக கூறிய மோடி இதுவரை வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ராகுல்காந்தி உறுதியளித்தபடி ஆட்சிக்கு வரும் போது உறுதியாக அமைப்பார். நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டிய நடத்த மோடி திட்டமிட்டுள்ளார். அந்த தேர்தல் வரும் போது தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடத்த வாய்ப்புள்ளது. எனவே காங்கிரஸ் கட்சியினர் ஒவ்வொருவரும் வேகமாக செயல்பட வேண்டும்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் பிரசாரம் செய்து வருகின்றனர். கர்நாடகாவில் சட்டப்பேரவை தேர்தல் மே 12ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 15ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றது. முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொள்கிறார். மே 3ம் தேதி யோகி ஆதித்யநாத்தின் கர்நாடக சுற்றுப்பயணம் தொடங்குகிறது. 7ம் தேதி முதல் 10ம் தேதி வரை தினந்தோறும் அவர் பேரணிகளில் பங்கேற்பார் என்றார். சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவும், தனது கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கின்றார்.
சென்னை கிழக்கு, மேற்கு, வடக்கு மற்றும் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் வரும் 28 (நாளை), 30ம் தேதிகளில் கள ஆய்வு நடத்துகிறார்.திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி பணிகள் குறித்து மாவட்ட வாரியாக கள ஆய்வு நடத்தி வருகிறார். சுமார் 2 மாதம் நடந்து வரும் இந்த ஆய்வில் திமுக நிர்வாகிகள், முன்னணியினர், அணிகளின் நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். நிர்வாகிகள் புகார்களை தெரிவிக்க புகார் பெட்டியும் வைக்கப்பட்டுள்ளது. புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. 2 கட்டங்களாக கள ஆய்வு நடத்தி வரும் மு.க.ஸ்டாலின் 60க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் கள ஆய்வு நடத்தி முடித்துள்ளார்.
தினகரன், திவாகரன் சண்டைக்கு காரணம் என்ன என்று நிருபர்கள் கேட்டதற்கு, கத்திரிக்காய் முற்றினால் கடை தெருவுக்கு வந்துதான் ஆக வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.சென்னையில் நேற்று அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: குட்கா வழக்கில் தொடர்புடையவர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவார்களா என கேட்கிறீர்கள். குற்றச்சாட்டு என்பது வேறு, குற்றச்சாட்டு உறுதி செய்வது என்பது வே.று இப்போது சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. விசாரணையின் போக்கை பார்த்துதான் கூற முடியும். சசிகலா குடும்பத்தில் டிடிவி.தினகரனுக்கும், திவாகரனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. கத்திரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்து தான் ஆக வேண்டும். அதன்படி கடைத்தெருவுக்கு அவர்கள் சண்டை வந்துள்ளது. அந்த குடும்பத்தை ஜெயலலிதா ஏற்றுக்கொள்ளவில்லை. ஜெயலலிதா என்னை விலக்கி வைத்தார் என்று டி.டி.வி.தினகரனே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
உடல் நலம் குன்றியதால் திவாகரன் உளறிவருகிறார்' என்று டிடிவி.தினகரன் கூறி உள்ளார்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த சுவாமிமலையில் அ.ம.மு.க. துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று அளித்த பேட்டி:மாநில அரசு நலனுக்காகதான் மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகவும், 2021 சட்டமன்ற தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிமுக வெற்றி பெறும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மாநில அரசின் நலனுக்காக அவர்கள் மத்திய அரசுடன் இணக்கமாக இல்லை. அவர்களுடைய சுயநலனுக்காகத்தான் இணக்கமாக இருந்து வருகின்றனர். ஆர்.கே.நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவால் வெற்றி பெற முடியவில்லை. அப்படி இருக்கையில் அவர்களால் எப்படி வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும். அனைத்து தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பர்.
குட்கா ஊழல் விசாரணை தடையில்லாமல் நடக்க தமிழக அரசு பதவி விலக வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். திருநாவுக்கரசர்(காங்கிரஸ்): குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது வரவேற்கதக்கது. விசாரணையில் யாராக இருந்தாலும் அமைச்சராக இருந்தாலும் சரி. அதிகாரிகளாக இருந்தாலும் சரி அவர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.அன்புமணி(பாமக இளைஞரணி தலைவர்): குட்கா வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் காப்பாற்ற ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகிய 3 முதலமைச்சர்களும் முயன்றனர். எனவே, இப்போது இந்த வழக்கின் விசாரணை சி.பி.ஐக்கு மாற்றப்பட்டிருப்பதன் உண்மைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை மக்களிடையே எழுந்துள்ளது. பினாமி ஆட்சியாளர்கள் தொடர்ந்து பதவியில் இருந்தால் இவ்வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்காமல் முட்டுக்கட்டைப் போட வாய்ப்புள்ளது.
முதன்மைச் செயலாளர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: அனைத்து தரப்பினரின் வரவேற்புடன் வெற்றிகரமாக நடத்திய காவிரி உரிமை மீட்பு பயணத்தின் தாக்கத்தைப் பொறுக்க முடியாமல் டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் மற்ற அமைச்சர்களும் பொதுக்கூட்டம் போடுகிறார்கள். பேசுவதற்கு அவர்கள் வந்தாலும், கேட்பதற்கு ஆள் இல்லாத நிலையில், தி.மு.க. நாகப்பட்டணத்தில் பேசிய, பதவி வாங்குவதற்காகவே தர்மயுத்தம் நடத்திய துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ், சர்க்காரியா கமிஷனுக்குப் பயந்து காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் தி.மு.க. துரோகம் செய்துவிட்டது என்ற அரதப் பழசான பாட்டையே பாடியிருக்கிறார்.
திவாகரன் இடையிலான மோதல், உச்சகட்டத்தை எட்டியுள்ளது. ஒருவருக்கொருவர், 'சுளீர்' வார்த்தைகளால், சண்டையிட்டு வருகின்றனர். இவர்கள் மோதலில், பல உண்மைகள் வெளிவருவது, உறவினர்களிடம் பீதியை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரம், சசி குடும்பத்தினர் அடித்துக் கொள்வதால், அ.தி.மு.க.,வினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இருந்த பனிப்போர், தற்போது பெரும் மோதலாக உருவெடுத்துள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர், பொது வெளியில் விமர்சித்து வருகின்றனர். இதனால் பல, 'உண்மைகள்' வெளி வந்த வண்ணம் உள்ளன. திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அடுத்த சுந்தரக்கோட்டையில், சசியின் தம்பி திவாகரன் அளித்த பேட்டி:சசிகலா சிறைக்கு சென்ற நேரத்தில், முதல்வர் பழனிசாமியை ஆதரித் தேன். பின், குடும்ப உறுப்பினர்கள் சிலரின் வேண்டுகோளை ஏற்று, தினகரனுக்கு ஆதரவு தெரிவித்தேன். தினகரன் கட்சியில், நான் அடிப்படை உறுப்பினர் கூட இல்லை.